Published : 28 Sep 2022 06:04 AM
Last Updated : 28 Sep 2022 06:04 AM
சென்னை: தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குரிய ஹால் டிக்கெட்கள் நாளை (செப்டம்பர் 29) வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட அறிவிப்பில், “தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அக்டோபர் 10 முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்கள் நாளை (செப். 29) மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
இதையடுத்து தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து தங்களுக்கான ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்வின் போது ஹால் டிக்கெட் இல்லாதவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. விரிவான தேர்வுக்கால அட்டவணை உட்பட கூடுதல் தகவல்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT