Published : 23 Sep 2022 06:04 AM
Last Updated : 23 Sep 2022 06:04 AM
சென்னை: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாகவுள்ள குருப்-பி, குருப்-சி பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாப் செலக்சன் கமிஷன்) வெளியிட்டுள்ளது.
இதற்கான போட்டித்தேர்வு டிசம்பர் மாதம் கணினிவழியில் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 8 மையங்களில் தேர்வு நடைபெறும். தகுதியுடைய தேர்வர்கள் எஸ்எஸ்சி இணையதளத்தை (www.ssc.nic.in) பயன்படுத்தி அக்டோபர் மாதம் 8-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பணிவிவரங்கள், கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுக்கட்டணம், தேர்வுமுறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களை எஸ்எஸ்சி இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம் என்று எஸ்எஸ்சி தென்மண்டல இயக்குநர் கே.நாகராஜா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT