Published : 23 Sep 2022 06:08 AM
Last Updated : 23 Sep 2022 06:08 AM

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் 182 ஆசிரியர்களை விரைவில் நியமிக்க உத்தரவு

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் 182 ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்குநர் சுதன் வெளியிட்ட சுற்றறிக்கை: சமக்ர சிக்ஷா எனும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் காலியாக உள்ள 182 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பலாம். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், மொழிபெயர்ப்பு, மின்பாடப் பொருள் தயாரிப்பு போன்றபல்வேறு செயல்பாடுகள் மேற்கொள் ளப்படுகின்றன.

இக்கல்விப் பணிகளில் ஈடுபட்டு இருக்கும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிலாக அவர்களின் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உடனே மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது.

அதற்காக மாற்றுப்பணியின் கீழ் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணிக்காலம் இன்னும் சில நாட்களே இருப்பதால், அவர்களுக்கு பதிலாக பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் தற்காலிக ஆசிரியர்களை பணி அமர்த்திக் கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேற்கண்ட நியமனத்தின்போது முதலில் 3 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் அந்தந்த ஊர்களில், பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தகுதியுள்ள நபர்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர், உதவித் தலைமை ஆசிரியர் ஆகியோரை கொண்ட குழுவால் நியமிக்கலாம். இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 10,000, முதுநிலை ஆசிரியர்களுக்கு மாதம்ரூ.12,000 மதிப்பூதியம் வழங்கலாம் என திட்ட இயக்குனர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x