Published : 21 Sep 2022 06:24 AM
Last Updated : 21 Sep 2022 06:24 AM

காஷ்மீரில் வெளியாகிறது பொன்னியின் செல்வன்

ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஸ்ரீநகரில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்கு திறக்கப்பட்டது. அந்த தியேட்டரில் பொன்னியின் செல்வன் வெளியாக உள்ளது.

தீவிரவாதத்தால் காஷ்மீரில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஸ்ரீநகரில் சிவபோரா பகுதியில் கட்டப்பட்டுள்ள மல்டி ஃபிளக்ஸ் திரையரங்கை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று திறந்துவைத்தார். 3 திரைகளுடன் 520 இருக்கைகள் கொண்ட மல்டிஃபிளக்ஸ் திரையரங்கிற்கு ஐநாக்ஸ் நிறுவனம் பங்குதாரராக இருக் கிறது. தற்போது இரண்டு திரைகளிலும், அக்டோபரில் மூன்றாவது திரையிலும் படம் திரையிடப்பட உள்ளது. இந்த திரையரங்கில் வரும் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x