Published : 21 Sep 2022 06:02 AM
Last Updated : 21 Sep 2022 06:02 AM

1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை காலாண்டு தேர்வு இன்று தொடக்கம்

சென்னை: பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, முதல் பருவத் தேர்வு மற்றும் காலாண்டு தேர்வு இன்று தொடங்குகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, தொகுத்தறியும் மதிப்பீட்டு தேர்வு என்ற முறையில், பருவத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள், ஒவ்வொரு மாவட்டத்திலும், பாட வாரியாக தனித்தனியே கால அட்டவணை தயாரிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. இதுதவிர ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்று முதல் நடத்தப்படுகிறது. வரும் 30-ம் தேதியுடன் தேர்வுகள் முடிந்து, அக். 1-ம் தேதி முதல் விடுமுறை விடப்படுகிறது. அக்.6-ம் தேதி பள்ளிகளை திறக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x