Published : 21 Sep 2022 06:06 AM
Last Updated : 21 Sep 2022 06:06 AM
சென்னை: பொறியியல் படிப்பில் முதல் சுற்றில் கலந்தாய்வில் இடம்பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர நாளை (செப். 22) வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு செப். 10-15 வரை நடைபெற்றது. இதில் 14, 524 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் பங்கேற்றவர்களுக்கு கல்லூரிகள் இறுதி செய்யப்பட்டு கடிதங்கள் வழங்கப்பட்டன. அக்கடிதத்தை கொண்டு அடுத்த 7 நாட்களுக்குள் குறிப்பிட்ட கல்லூரிக்கு சென்று சேர வேண்டும் என்ற புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது.
அந்த வகையில் முதல் சுற்றில் இடம்பெற்ற மாணவர்கள் நாளைக்குள் (செப். 22) கல்லூரிகளில் சேர அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சேர தவறினால் அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு அடுத்து வருகின்ற கலந்தாய்வில் சேர்க்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT