Published : 20 Sep 2022 06:04 AM
Last Updated : 20 Sep 2022 06:04 AM
சென்னை: அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை மதுரையில் செப்.16-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு சரியான நேரத்திற்கு உணவு வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளார்.
அதன்படி, அதிகாலையில் சமையல் தொடங்கும் நேரம், செய்து முடிக்கும் நேரம், அங்கிருந்து உணவை வாகனத்தில் கொண்டு செல்லும் நேரம், பள்ளியில் விநியோகிக்கும் நேரம், குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நேரம் போன்றவற்றை உடனுக்குடன் காணும் வகையில் சி.எம்.13எப்.எஸ் என்ற செயலி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இச்செயலி மூலம் காலை சிற்றுண்டி முறையாக வழங்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT