Published : 12 Sep 2022 06:10 AM
Last Updated : 12 Sep 2022 06:10 AM

தமிழகத்தில் ரூ.171 கோடியில் 28 தகைசால் பள்ளிகள்: 62,460 மாணவ, மாணவியர் பயன்பெறுவர்

சென்னை: தமிழகத்தில் ரூ.171 கோடியில் 28 தகைசால் பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் அரசு பள்ளிகளின் 62,460 மாணவ, மாணவியர் பயன்பெறுவர்.

தமிழகத்தில் தகைசால் பள்ளிகள் திட்டத்தை சென்னையில் அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தொடங்கி வைத்தார். இந்த தகைசால் பள்ளிகளில் மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப அனைத்து வசதிகளுடன்கூடிய வகுப்பறைகள், அதிநவீன ஆய்வுக்கூடம், விளையாட்டு, நூலகம், கலை, இலக்கியம் உள்ளிட்ட கல்வி சாரா செயல்பாடுகள் இடம்பெறும். நாடகம், இசை போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் தரப்படும்.

ஒருங்கிணைந்த வளர்ச்சி

அதிநவீன தொழில்நுட்ப, டிஜிட்டல் வசதிகளுடன் அமைக்கப் படும் தகைசால் பள்ளிகள் மூலம் அளிக்கப்படும் கல்வியால் மாணவர்களிடம் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தகைசால் பள்ளிகள் அனைத்துமாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ரூ.171 கோடியில் 28 தகைசால் பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் அரசு பள்ளிகளின் 62,460மாணவ, மாணவியர் பயன்பெறுவர்.

எந்தெந்த ஊர்களில்...

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டாரம், காமராஜ் நகர், சென்னை மாவட்டம், தி.நகர் வட்டாரம், அசோக்நகர், காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய காஞ்சிபுரம், காட்டாங்குளத்தூர் வட்டாரம், நந்திவரம், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, வேலூர் நகரம், திருப்பத்தூர் மாவட்டம், நாட்ராம்பள்ளி வட்டாரம், வாணியம் பாடி காந்தி நகர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மாவட்டம், குகை, ஈரோடு, நீலகிரி மாவட்டம், கூடலூர், கோவை நகரம்,பழனி நகரம், கரூர் மாவட்டம், குளித்தலை, திருச்சி நகரம், கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மதுரை தெற்கு வெளிவீதி, கோவில்பட்டி, திருநெல்வேலி நகரம், கல்லணை, கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டாரம், நாகர்கோவில், கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகியஇடங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இவற்றில் பெரும்பாலானை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகள் ஆகும். சில மாதிரிப் பள்ளிகளும் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x