Published : 12 Sep 2022 06:04 AM
Last Updated : 12 Sep 2022 06:04 AM

நல்லாசிரியர் விருது தொகையை பள்ளிக்கு தந்த ஆசிரியை

ராமநாதபுரம்: மாநில அரசின் நல்லாசிரியர் விருதுபெற்ற அரசு பள்ளி ஆசிரியை, தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை தான் பணிபுரியும் பள்ளிக்கு வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை உமாதேவி உள்ளிட்ட 11 ஆசிரியர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றனர். இந்நிலையில் ஆசிரியை உமாதேவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளிக் கட்டிடம் மற்றும் கழிப்பறை சேதம் அடைந்து காணப்படுவதால் அவற்றை சீர்செய்ய, தனக்கு அரசு வழங்கிய பரிசுப் பணம் ரூ. 10,000 தனது தந்தை மோகன்தாஸ் சார்பாகரூ. 10,000 எனரூ.20,000-த்தை பள்ளிக்கு ஆசிரியை உமாதேவி வழங்கினார்.

முன்னதாக, மாணவர்கள், மற்றும் பெற்றோர்விருதுபெற்ற ஆசிரியை உமாதேவியை முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில்இருந்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x