Published : 08 Sep 2022 06:06 AM
Last Updated : 08 Sep 2022 06:06 AM
சென்னை: மத்திய சமூக நீதி அமைச்சகம் சார்பில், "யாசஸ்வி" எனும் இளைய சாதனையாளருக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பள்ளிகளில் 9, 11-ம் வகுப்புகளில் பயிலும், பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான "யாசஸ்வி தகுதித்தேர்வு" தேசிய தேர்வு முகமை சார்பில் செப்டம்பர் 25-ம் தேதி கணினி வழியில் நடைபெறுகிறது.
தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்டம்பர் 5-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பதர்கான கடைசி தேதி செப்டம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT