Published : 05 Sep 2022 04:59 AM
Last Updated : 05 Sep 2022 04:59 AM

ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை

நோபிடாவ்: மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றியவர் ஆங் சாங் சூகி.

அந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு கிளர்ச்சியைத் தூண்டியது, ஊழல் உட்பட பல்வேறு வழக்குகள் போடப்பட்டு சில வழக்குகளில் அவருக்கு ஏற்கெனவே 17 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில் அவருக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x