Published : 30 Aug 2022 06:08 AM
Last Updated : 30 Aug 2022 06:08 AM
உடுமலை: தேசிய அளவில் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தஇந்திய தேர்தல் ஆணையம் மாணவர்களிடையே ‘ஸ்வீப்கான்டெஸ்ட் 2022’ போட்டியை நடத்தியது. இதில் மாணவர்கள் கலந்துகொண்டு பதிவு செய்தவீடியோக்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பங்கேற்ற உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள ஆர்கேஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவிகள் குழு நடனப் போட்டியில் மாநில அளவில் முதல் இடத்தை பெற்றனர்.
சென்னையில் நடைபெற்ற விழாவில், இந்திய தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டே மாணவிகளுக்கு சான்றுகளை வழங்கினார். இதுகுறித்து பள்ளியின் முதல்வர் டி.மாலா கூறும்போது, “ஜெய ஸ்ரேயா, பொன்மணி, கார்த்திகா, தீபிகா, பிரியதர்ஷினி, ஷாலினி பிரியா, பிரதீபா, செர்லின், சில்வியா வருணா, ஹரிணி, மோனிகா, வினோதா ஆகியோர் பங்கேற்று முதலிடம் பெற்றனர். தேர்தல் ஆணையம் நடத்திய போட்டியில் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT