Published : 10 Aug 2022 06:08 AM
Last Updated : 10 Aug 2022 06:08 AM

செப்.10 முதல் 15 வரை ஆசிரியர் தகுதித்தேர்வு: டிஆர்பி அறிவிப்பு

சென்னை: இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு (தாள்-1) ஆகஸ்டு மாதம் 25 முதல் 31-ம் தேதி வரை கணினிவழியில் நடத்தப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாக காரணங்களினால் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

அதன்படி தகுதித்தேர்வு செப்டம்பர் 10 முதல் 15 வரை நடைபெறும். கணினிவழி தேர்வுக்கான பயிற்சித்தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்களுக்கு வசதியாக தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் அதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

தேர்வுக்கால அட்டவணை மற்றும் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜி.லதா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x