Published : 02 Aug 2022 06:06 AM
Last Updated : 02 Aug 2022 06:06 AM

லக்னோ | பென்சில் விலை உயர்வு பற்றி மோடிக்கு 1-ம் வகுப்பு மாணவி கடிதம்

லக்னோ: உத்தரபிரதேசம் கன்னோஜ் மாவட்டம் சிப்ரமாவ் நகரை சேர்ந்த 1-ம் வகுப்பு மாணவி கிருத்தி துபே பென்சில் விலை உயர்வு குறித்து பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் வைரலானது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது: எனது பெயர் கிருத்தி துபே. நான் ஒன்றாம் வகுப்பு படிக்கிறேன். மோடி ஜி விலைவாசி உயர்வு காரணமாக எனது பென்சில், ரப்பர் விலை உயர்ந்துவிட்டது. நான் பென்சில் கேட்டதற்காக எனது அம்மா என்னை அடிக்கிறார். நான் என்ன செய்வது. மற்ற குழந்தைகள் எனது பென்சிலை திருடுகிறார்கள்.

இவ்வாறு மாணவி கிருத்தி துபே எழுதியுள்ளார். இது தனது மகளின் மன் கி பாத் (மனதின் குரல்) என்று மாணவியின் தந்தை விஷால் துபே கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x