Published : 26 Jul 2022 06:36 AM
Last Updated : 26 Jul 2022 06:36 AM
டோக்கியோ: ஜப்பானில் எரிமலை வெடித்ததால் மக்கள் வெளியேறும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள ககோஷிமாவில் உள்ள சகுராஜிமா எரிமலையில் இருந்து பாறைகள் வெடித்து தீப்பிழம்புகள் வெளியேறி வருகிறது.
இதனால், அந்தப் பகுதியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் வெளியேறும்படி ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. எரிமலை வெடிப்பால் எழும் புகை சுமார் 300 மீட்டர் உயரத்திற்கு விண்ணை முட்டுகிறது.
எரிமலை வெடிப்பு குறித்து ஆலோசனை செய்த ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, சேதங்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT