Published : 22 Jul 2022 06:37 AM
Last Updated : 22 Jul 2022 06:37 AM

எலன் மஸ்க் மீது ட்விட்டர் வழக்கில் அக்டோபரில் விசாரணை

வாஷிங்டன்: எலன் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் மாதம் விசாரணை நடக்கும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உலகின் பெரும் பணக்காரரான எலன் மஸ்க், ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்க முடிவு செய்து ஒப்பந்தமும் செய்யப்பட்டது. ஆனால், நிறைய போலிக் கணக்குகளும் பயன்படுத்தாத கணக்குகளும் இருப்பதாகக் கூறி ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலன் மஸ்க் கடந்த 9-ம் தேதி அறிவித்தார்.

இதற்காக எலன் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு அமெரிக்காவின் டெல்லவேர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரணையைத் தொடங்குமாறு எலன் தரப்பில் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அக்டோபர் மாதம் விசாரணை தொடங்கும் என்று நீதிமன்றம் அறிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x