Published : 20 Jul 2022 06:30 AM
Last Updated : 20 Jul 2022 06:30 AM
புதுடெல்லி: அக்னிப்பாதை திட்டத்தை எதிர்த்துதாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத் தையும், டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது.
நாடு முழுவதும் 17 வயது முதல் 23 வயது வரையிலான இளைஞர்கள் ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டு காலம் பணியாற்றும் வகையில் அக்னிபாதை திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் கிடைக்கும்.
4 ஆண்டுகள் பயிற்சி முடித்ததும் பயிற்சி பெறுவோரில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். மீதிப்பேருக்கு அவர்கள் பணியாற்றிய வகையில் ரூ.11 லட்சம் ரொக்கமாக அளிக்கப்படும். மேலும், வேலை வாய்ப்புகளிலும் முன்னுரிமை கிடைக்கும்.
இத்திட்டத்துக்கு எதிராக, நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரளா, டெல்லி, பாட்னா, பஞ்சாப் மற்றும் ஹரியானா, உத்தராகண்ட் உயர்நீதிமன்றங்களிலும் இது போன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா தெரிவித்தார்.
இதையடுத்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘‘அரசியல் சாசனத்தின் 226-வது பிரிவுப்படி உயர்நீதிமன்றம் தனது முக்கியத்துவத்தை இழக்க கூடாது. நாம் உயர்நீதிமன்றத்தின் கருத்தை கவனிக்க வேண்டும். அதுதான் எப்போதும் நல்லது.
முதலில் இந்தவிவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத் தின் எண்ணத்தை அறிய விரும்புகிறோம். விரைவான விசாரணைக்காக அனைத்து பொது நல மனுக்களையும் ஒன்றாக சேர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு பதிவாளர் ஜெனரல் அனுப்ப வேண்டும்’’ என கூறியது.
இதையடுத்து இந்த மனுக்களை இன்று விசாரிப்பதாக, டெல்லி உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT