Published : 20 Jul 2022 06:09 AM
Last Updated : 20 Jul 2022 06:09 AM
கடந்த மே மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் விடைத்தாள் நகலை 20-ம் தேதி (இன்று புதன்கிழமை) பகல் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அப்போது தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும்.
விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் மேற்குறிப்பிட்ட இணையதளத்தை அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இரு நகல்கள் எடுத்து 21-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் 25-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை அங்கேயே பணமாக செலுத்த வேண்டும்.
புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டமுதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பங்களை ஒப்படைத்து அதற்கான கட்டணத்தொகையை பணமாக செலுத்த வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT