Published : 19 Jul 2022 06:18 AM
Last Updated : 19 Jul 2022 06:18 AM
கோவை சின்னவேடம்பட்டி யில் உள்ள கவுமாரம் சுசீலாசர்வதேச உறைவிடப் பள்ளி (கேசிர்ஸ்) சார்பில், சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள கேசிர்ஸ் சர்வதேச உறைவிடப் பள்ளியில் மாணவர்களை உறுப்பினர்களாக கொண்ட‘சமூக பொறுப்புணர்வு கிளப்’ உள்ளது. இந்த கிளப் சார்பில் சாலை போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றி, பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மாநகரில் ஒரேநாளில் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வாகன ஓட்டுநர்களிடம் சிகப்பு விளக்கு எரிந்தவுடன் வெள்ளைக் கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும், பாதுகாப்பான பயணம் குறித்தும் எடுத்துரைக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாணவர்கள் நடத்தினர்.
இப்பள்ளி மாணவர்கள் தயாரித்த போக்குவரத்து விழிப்புணர்வு குறும்பட வீடியோ வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கேசிர்ஸ் பள்ளியின் தாளாளர் தேவபிரகாஷ், செயல் இயக்குநர் லலிதா பிரகாஷ், பள்ளியின் முதல்வர் சசிப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT