Published : 19 Jul 2022 06:30 AM
Last Updated : 19 Jul 2022 06:30 AM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் கட்சி 15 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெளியானது.
இதில், எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி 15 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர்கள் 4 இடங்களிலும் சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்க்கு ஆளும் கட்சி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT