Published : 25 Feb 2022 07:56 PM
Last Updated : 25 Feb 2022 07:56 PM
கேரளாவின் 10 மாவட்டங்களை பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆளப் போவது நாட்டிற்கே முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
கேரளாவில் 14 மாவட்டங்கள் உள்ளன. இதில் 9 மாவட்டங்களில் தற்போது பெண் ஐஏஎஸ் அதிகாரிகளே மாவட்ட நிர்வாக அதிகாரிகளாக உள்ளனர். இன்னொரு மாவட்டத்திற்கும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை அம்மாநில அரசு நியமித்துள்ளது. இதன்மூலம் கேரளாவின் 70 சதவீதம் பகுதியை பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆளப்போவது பெண்களால் நிர்வகிக்கப்படும் முன்மாதிரி மாநிலம் கேரளா என்ற பெருமையை பெற்றுத்தரும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.
தற்போதுள்ள பெண் ஐஏஎஸ் அதிகாரிகள்:
> பண்டாரி ஸ்வாகத் ரன்வீர்சந்த் - காசர்கோடு
> ஏ.கீதா - வயநாடு
> மிருன்மை ஜோஷி - பாலக்காடு
> ஹரிதா வி குமார் - திருச்சூர்
> டாக்டர் பி.கே.ஜெயஸ்ரீ - கோட்டயம்
> ஷீபா ஜார்ஜ் - இடுக்கி
> டாக்டர் திவ்யா ஐயர் - பத்தனம்திட்டா
> அஃப்சானா பர்வீன் - கொல்லம்
> டாக்டர் நவ்ஜோத் கோஷா - திருவனந்தபுரம்
இவர்களுடன் டாக்டர் ரேணுராஜ் தற்போது ஆலப்புழா கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள அரசின் இந்த நடவடிக்கை நாட்டிற்கே முன்மாதிரி நடவடிக்கையாகவும் பெண்களுக்கான ஊக்கமாகவும் அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT