Published : 28 Nov 2021 03:06 AM
Last Updated : 28 Nov 2021 03:06 AM
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பெருந்துறை நிவேதா கலைமற்றும் கைவினைக் கழகத்துடன் இணைந்து நடத்தும் ஓரிகாமிஆன்லைன் பயிலரங்கம் டிச.17முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது.
மாணவர்களுக்கு பயனளிக்கும்விதமாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல செயல்பாடுகளை ஆன்லைனில் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம் வரும் டிச.17, 18, 19-ம் தேதிகளில் தினமும் மாலை 6 முதல் 7 மணிவரை நடக்க உள்ளது. இதில் 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் முதல் அனைவரும் பங்கேற்கலாம்.
பயிலரங்கை நடத்தும் நிர்மல்குமார், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓரிகாமி பயிற்சிகளை திறம்பட நடத்தி வருபவர். இதில் 10-க்கும் மேற்பட்ட கைவினைப் பணிகளைக் கற்றுத்தர உள்ளார்.
இதில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00144 என்ற லிங்க்கில் ரூ.249 பதிவுக் கட்டணம் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரம் அறிய 9003966866 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT