1 - 8 வரை நேரடி வகுப்பு நவ.1-ல் தொடங்குவதாக அரசாணை வெளியீடு

1 - 8 வரை நேரடி வகுப்பு நவ.1-ல் தொடங்குவதாக அரசாணை வெளியீடு
Updated on
1 min read

ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நவ.1-ம் தேதி தொடங்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில், ‘‘மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் தெரிவித்த ஆலோசனையின் பேரில் ஏற்கெனவே 9 முதல் 12-ம் வகுப்பு வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதே வகையிலும், மாணவர்களின் உளவியல் மற்றும் கல்வி நலனைக் கருத்தில்கொண்டும், கல்வி இடைவெளி காலத்தை குறைக்கும் பொருட்டும், நவ.1 முதல் அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

அப்பள்ளிகளில் கரோனா தடுப்புவழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியம். இதற்குத்தேவையான தயாரிப்பு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும்’’ என கூறப்பட்டுள் ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in