Published : 25 Aug 2021 02:15 PM
Last Updated : 25 Aug 2021 02:15 PM

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை.யில் பிஎச்.டி., எம்.ஃபில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க செப்.15 கடைசி

சென்னை

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 2021- 2022ஆம் கல்வியாண்டிற்கான பிஎச்.டி., எம்.ஃபில் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆசிரியர் கல்வியை மேம்படுத்தி, தரமான ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தில் 2008-ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் சுமார் 700 தனியார் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பி.எட், எம்.எட். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 2021- 2022ஆம் கல்வியாண்டிற்கான பிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 15 கடைசித் தேதி ஆகும்.

முழு நேர மற்றும் பகுதி நேர எம்.ஃபில். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க: https://www.tnteu.ac.in/admin/file_storage/cms/M.Phil%20Application%202021%20modified.pdf.pdf

கூடுதல் விவரங்களுக்கு: 99766 32971/ 97870 69573/ 75502 72611

முழுநேர மற்றும் பகுதி நேர பிஎச்.டி. படிப்புகளுக்கு விண்ணப்பிக்க:
https://www.tnteu.ac.in/admin/file_storage/cms/Ph.D%20Application%202021-1%20modified.pdf.pdf

கூடுதல் விவரங்களுக்கு: 99766 32971/ 97870 69573/ 75502 72611

மாணவர்கள் பூா்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன், 'பதிவாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், கங்கை அம்மன் கோயில் தெரு, காரப்பாக்கம், சென்னை 600 097' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x