Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM
அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தெரிவித் தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
ஆசிரியர்களுக்கான தொடர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை தொடங்கியிருக்கிறோம். அதன்படி 432 ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆன்லைன் வகுப்புக்கு ஏற்ற முறையில் ஆசிரியர்களுக்கு கணினி, செல்போன்மூலம் பயிற்சி அளிக்கப்படும். இந்த ஆசிரியர்களைக் கொண்டு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 2 முதல்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு பேட்ச்சிலும் தலா 55,300 பேர் வீதம் மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
கரோனா தொற்று பாதிப்பு காரணமாக தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு2 லட்சத்து 4 ஆயிரத்து 379 மாணவ,மாணவிகள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT