Published : 21 May 2021 03:10 AM
Last Updated : 21 May 2021 03:10 AM
ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.2 கோடி ஊதியத்துக்கு வேலை பெற்றுள்ளார்.
தீப்தி நார்குட்டி ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானிய பொறியியல் கல்லூரியில் மென்பொருள் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்ற தீப்தி, அமெரிக்க நிதி நிறுவனமான ஜெபி மோர்கன் நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார்.
மூன்றாண்டுகளுக்கு முன்புஅந்த வேலையிலிருந்து ராஜினாமாசெய்துவிட்டு மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்கு சென்றார்.அவருக்கு அமெரிக்காவில் உள்ளஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் படிக்க வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில்தான் அவருடைய படிப்பு முடிந்தது. பல்கலைக்கழக வளாகத் தேர்வின்போது, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்துள்ளது.
ஆண்டு ஊதியம் ரூ.2 கோடி. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 300 மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்தது. அதில் தீப்தி அதிக ஊதியப் பிரிவில், கிரேடு 2 பொறியியலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மட்டுமல்ல கோல்டுமேன் சாக்ஸ்,அமேசான் ஆகிய நிறுவனங்களிலிருந்தும் தீப்திக்கு வேலை வாய்ப்பு வந்தது. ஆனால், அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தையே தேர்வு செய்துள்ளார்.
ஏற்கெனவே 2014-2015ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மாணவப் பணியாளாராக இருந்துள்ளார்.
“அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவி புரிகின்றன. மனிதர்களின் வாழ்வை மாற்றி அமைப்பதில் தொழில்நுட்பங்கள் பெரும் தாக்கம் செலுத்துகின்றன” என்று தீப்தி தன்னுடைய லிங்கிடுஇன் கணக்கில், தன்னைப்பற்றிய பகுதியில் குறிப்பிட்டுள்ளார். தீப்தியின் தந்தை ஹைதராபாத் காவல் துறையில் தடையவில் நிபுணராக உள்ளார்.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT