Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM

மொழிப்பாட தேர்வு மட்டும் மே 31-க்கு தள்ளிவைப்பு; திட்டமிட்டபடி பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடக்கும்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும், மே 3-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்த மொழிப்பாடத் தேர்வு மட்டும் மே 31-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படு வதாகவும் அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தனித்தேர்வர்கள் உட்பட 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வெழுத உள்ளனர்.

கரோனா பாதிப்பு காரணமாக மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

அத்துடன், பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்து வருகின்றன. மாணவர்களின் அகமதிப்பெண்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற் கான முன்னேற்பாடுகளும் நடந்து வருகின்றன.

ரத்து செய்ய வலியுறுத்தல்

இந்நிலையில், அண்மைக்காலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு மீண் டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடு களை அரசு அறிவித்துள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக திட்டமிட்டபடி பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3-ம் தேதி தொடங்குமா என்ற சந்தேகம் மாண வர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்தது. மாணவர்கள் நலன் கருதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதற்கிடையே, கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தி னார். அந்தக் கூட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்தும் விவாதிக்கப் பட்டதாக தகவல்கள் வெளியாயின.

மகாராஷ்டிராவில் கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் அங்கு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக நேற்று அறி விக்கப்பட்டது. எனவே, தமிழகத்திலும் கரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து, பிளஸ் 2 தேர்வு தள்ளிவைக் கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் என அரசு தேர்வுத்துறை அறி வித்துள்ளது. மே 3-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மொழிப்பாட தேர்வு மட்டும் மே 31-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாகவும் இதர தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதி களில் நடைபெறும் என்றும் அரசு தேர்வுத்துறை அறிவித்தது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2020-21 கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்கு எண் ணிக்கை மே 2-ம் தேதி நடக்கிறது. எனவே, மே 3-ம் தேதி நடைபெறு வதாக இருந்த மொழிப்பாடத் தேர்வு மட்டும் மே 31-ம் தேதி நடைபெறும். இதர தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக் கப்பட்டிருந்த தேதிகளிலேயே நடை பெறும். மேலும் தேர்வுகள் நடைபெறும் போது பின்பற்ற வேண்டிய விரிவான நிலை வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x