Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 03:15 AM
பள்ளி வகுப்பறைகளில் தனிநபர் இடைவெளியுடன் மாணவர்களை அமர வைக்க வேண்டும் என்றுபள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்திஉள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3முதல் 21-ம் தேதி வரை நடத்தப்படஉள்ளது. இதனால் கரோனா பரவல்அச்சத்துக்கு இடையேயும் பிளஸ் 2மாணவர்களுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே தனியார் பள்ளிகளில் வகுப்பறைகளில் கூடுதல்மாணவர்கள் அமர வைக்கப்படுவதாக கல்வித் துறைக்கு புகார்கள் வந்தன.
அதைத் தொடர்ந்து, கரோனாதொற்று அச்சத்தால் வகுப்பறைகளில் 20 மாணவர்களுக்கு மேல் அமர வைக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வகுப்பறைகளில் 50 சதவீத இருக்கைகள் அல்லது 20-க்கு மிகாமல் மாணவர்களை அமர வைக்க வேண்டும்.ஆசிரியர் பற்றாக்குறையால் ஒருவரே பாடம் எடுக்க வேண்டியசூழல் இருப்பின், கலை அரங்குகள், உள்ளிட்ட திறந்தவெளி மையங்களில் தனிநபர் இடைவெளியுடன் மாணவர்களை அமர வைக்கலாம்.
அதேபோல், கரோனா அறிகுறிஉள்ளவர்களை பள்ளிகளுக்கு அனுமதிக்க வேண்டாம். மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும்போதே உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள், வளாகங்களில் முகக் கவசம் அணிவதை உறுதிசெய்ய வேண்டும். ஏதேனும் தவறுகள் நடைபெற்றால் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பொறுப்பேற்க நேரிடும்.
எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வாயிலாக பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்திஉள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT