Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM

9, 11-ம் வகுப்புக்கு நாளை பள்ளிகள் திறப்பு; பெற்றோர் அனுமதி கடிதம் அவசியம்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

பள்ளிக்கு நாளை வருகை தரும் 9, 11-ம் வகுப்பு மாணவர்கள், பெற்றோரிடம் கட்டாயம் அனுமதிக் கடிதம் பெற்று வரவேண்டும் என்று கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் தற்போது தணிந்துள்ள சூழலில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஜன.19-ம்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 9, 11-ம்வகுப்பு மாணவர்களுக்கு நாளை(பிப்.8) முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

இந்நிலையில் பெற்றோரிடம் பள்ளி வருகைக்கான அனுமதி கடிதத்தை மாணவர்கள் அவசியம்பெறவேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

தமிழக அரசின் கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 9, 11-ம் வகுப்புகளுக்கு நாளை (பிப்.8) முதல் பள்ளிகளை திறந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களின் பெற்றோரிடமும் ஒப்புதலுக்கான அனுமதிக் கடிதம் கட்டாயம் பெறவேண்டும்.

இந்தத் தகவலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தெரிவித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x