Published : 06 Feb 2021 05:34 PM
Last Updated : 06 Feb 2021 05:34 PM

அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்; நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆதிதிராவிடர் நல ஆணையரகம் அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ஆதிதிராவிடர் நல ஆணையரகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நல ஆணையரகம் இன்று (பிப். 06) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள நபர்களிடமிருந்து கீழ்க்கண்ட விண்ணப்ப படிவத்தில் 19.02.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2. முக்கிய தேதிகள்:

3. தகுதிகள்:

(அ). கல்வித்தகுதி (06.02.2021 அன்று உள்ளபடி).

06.02.2021 நாளிட்ட அறிவிக்கை அன்று விண்ணப்பத்தாரர்கள் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள கல்வித்தகுதியை

பெற்றிருக்க வேண்டும்.

(1). எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல்.

(2). பத்தாம் வகுப்பு தோல்வி வரை.

(ஆ). ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்துக்கு அரசாணையின்படி முன்னுரிமை அளிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை-5, ஆதிதிராவிடர் நல ஆணையரகத்தில் 19.02.2021 மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x