Published : 05 Feb 2021 03:17 AM
Last Updated : 05 Feb 2021 03:17 AM
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் நினைவாக சாதனை முயற்சியாக நாடு முழுவதும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் மிகச்சிறிய அளவிலான 100 செயற்கைக் கோள்களைத் தயாரித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் பிப். 7-ம் தேதி ராமேசுவரத்தில் இருந்து வானில் செலுத்தப்படவுள்ளன.
இது குறித்து அப்துல் கலாமின் பேரனும் அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையின் நிறுவனருமான ஷேக் சலீம் செய்தியாளரிடம் கூறி யதாவது: ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் சுமார் 1,000 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து தலா 10 மாணவர்கள் கொண்ட ஒரு குழு என 100 குழுக்கள் அமைத்தோம். இவர்களுக்கு ஆன்லைன் மூலம் கையடக்க பெம்டோ செயற் கைக்கோள்களின் (Femto-satellites) வடிவமைப்பு மற்றும் அதன் மேம்பாட்டுக்கான அறிவுத் திறன் களைப் பயன்படுத்துவது குறித்துப் பயிற்சி வழங்கினோம். இந்த மாணவர்கள் 40 கிராம் முதல் அதிகபட்சமாக 50 கிராம் எடை கொண்ட செயற்கைக்கோள்களை வடிவமைத்தனர்.
ராமேசுவரத்தில் உள்ள தனியார் மைதானத்தில் பிப். 7-ம் தேதி காலை ஹீலியம் நிரப்பப்பட்ட ராட்சத பலூனில் 100 செயற்கைக்கோள்களையும் ஒரே நேரத்தில் வானில் செலுத்த உள்ளோம். ராட்சத ஹீலியம் பலூன் கயிறு மூலம் கட்டப்பட்டு சுமார் 8 ஆயிரம் மீட்டர் உயரம் வரை செலுத்தப்படும்.
இலக்கைச் சென்றடைந்ததும் அதனைக் கீழே கொண்டு வந்து செயற்கைக்கோள்களால் சேகரிக் கப்பட்ட ஓசோன் படலம், கதிர்வீச்சு, விவசாயம், காற்றின் வேகம், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட பல விவரங்கள் கணினிகளில் பதிவு செய் யப்படும்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 1000 மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொள்ள உள்ளனர், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT