Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

பிப்.2-ல் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

சென்னை

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை பிப். 2-ம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4 முதல் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பள்ளிகள் செய்முறை தேர்வுகளை மார்ச் 1-ம் தேதி முதல் நடத்திக் கொள்ளவும் அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கை அம்சங்கள் தொடர்பாக சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகிகளுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று இணையவழியில் கலந்துரையாடினார். அப்போது 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்.2-ம் தேதிவெளியிடப்பட உள்ளதாகவும், கல்விக்கொள்கையின் அடிப்படையில் 250 சிபிஎஸ்இ பள்ளி வளாகங்களில் மாற்றங்கள் செய்து நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x