Last Updated : 12 Jan, 2021 12:01 PM

 

Published : 12 Jan 2021 12:01 PM
Last Updated : 12 Jan 2021 12:01 PM

பொங்கல் பண்டிகை: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரி, காரைக்காலில் நாளை (13-ம் தேதி) முதல் 16-ம் தேதி வரை பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறையைப் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு, தனியார் பள்ளி வகுப்புகள் கடந்த 4-ம் தேதி முதல் சோதனை முறையில் நடந்து வருகின்றன. ஏற்கெனவே பொதுத்தேர்வு எழுத உள்ளோருக்கும் வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் பொங்கலையொட்டி புதுச்சேரி கல்வித்துறையானது நாளை முதல் 16-ம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. முன்னதாக, 13-ம் தேதி போகி பண்டிகையும், 15-ம் தேதி மாட்டுப் பொங்கலும், காணும் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக, புதுவை அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் 4 நாட்கள் அரசு விடுமுறையை அறிவித்துள்ளது.

இக்காலங்களில் பள்ளிகளில் நேரடி வகுப்புகளும், ஆன்லைன் வகுப்புகளும் நடக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காலையில் மட்டும் பள்ளி இயங்குகிறது. பொங்கலுக்குப் பிறகு வரும் 18-ம் தேதி முதல் முழு நேரமும் வகுப்புகள் இயங்குமா என்பது தொடர்பான அறிவிப்பு பிறகு வெளியிடப்படும் என்று பள்ளிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x