Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM

சிபிளாஸ் இன்ஃபோடெக் நிறுவனத்துடன் நேரு சர்வதேசப் பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிபிளாஸ் இன்ஃபோடெக் நிறுவனத்துடன் கோவை நேரு சர்வதேசப் பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

நேரு சர்வதேசப் பள்ளி, சென்னையில் உள்ள சிபிளாஸ் இன்ஃபோடெக் நிறுவனத்துடன் இணைந்து, முழுமையான பள்ளி மேலாண்மை தீர்வுகளை, ஆர்எஃப்ஐடி தொழில்நுட்பத்தில், மாணவர்களை பள்ளி வளாகத்திலும், வாகனங்களில் செல்லும்போதும் கண்காணிக்க புதிய அமைப்பை பயன்படுத்த உள்ளது.

இதற்காக, நேரு குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி மற்றும் செயலர் பி.கிருஷ்ணகுமார் முன்னிலையில், சிபிளாஸ் இன்ஃபோடெக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் பி.சென்னகேசவன் மற்றும் நேரு சர்வதேசப் பள்ளியின் தலைமை ஆசிரியை பிரியா சுரேஷ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “நேரு கல்விக் குழுமத்தின் கீழ், நேரு சர்வதேசப் பள்ளி செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் பாதுகாப்புக்காக நேரு சர்வதேசப் பள்ளி, இந்த புதிய தானியங்கி கண்காணிப்பு கட்டமைப்பை அறிமுகம் செய்துள்ளது.

சிபிளாஸ் இன்ஃபோடெக் நிறுவனம், சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பல்வேறு மென்பொருட்களை உருவாக்கி வருகிறது. வெப் அப்ளிகேஷன், இ-காமர்ஸ், மொபைல் ஆப் மேம்பாடு, இணையதள வடிவமைப்புகளில் ஈடுபட்டு வருகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x