Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM
பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக்களின் அடிப்படையில் வரும் 11-ம் தேதி பள்ளிகள் திறப்பு குறித்த முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பவானியில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 9-ம் தேதி ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும். அவர்கள் தெரிவிக்கும் கருத்துகள், ஆலோசனைகளின் அடிப்படையில், பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 11-ம் தேதி முடிவு அறிவிக்கப்படும்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்குப் பிறகு, தனியார் பள்ளிகள் கட்டிட அனுமதி பெறவேண்டும் என்ற விதிமுறை உருவாக்கப்பட்டது. கட்டிட அனுமதி பெறாதவர்களுக்கு ஓராண்டுதான் அங்கீகாரம் வழங்க வேண்டுமென்றாலும், முதல்வரின் ஒப்புதலுடன் இரண்டாண்டுகள் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வெளிப்படைத்தன்மையுடன் இதுவரை 2,512 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT