Published : 22 Oct 2020 06:44 AM
Last Updated : 22 Oct 2020 06:44 AM

‘என்எல்சி இந்தியா’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் விநாடி-வினா போட்டி

சென்னை

‘என்.எல்.சி. இந்தியா’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து பள்ளி மாணவ - மாணவிகளுக்கான ஆன்லைன் விநாடி-வினா போட்டியை நடத்துகின்றன.

‘நேர்மையே வாழ்க்கையின் வழி’ என்பதை நோக்கமாகக் கொண்டு ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2020’, அக்.27 முதல் நவ.2 வரை நாடெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு ‘விழிப்பான இந்தியா; வளமான இந்தியா’ எனும் கருப்பொருளில் ஊழல் எதிர்ப்பு குறித்தசமூக விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கத்துடன் ‘என்எல்சி இந்தியா’நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் விநாடி -வினா போட்டியை நடத்துகின்றன.

இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளிமாணவ-மாணவிகள் கலந்துகொள்ளலாம். 5, 6, 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் ஜூனியர் பிரிவிலும், 8, 9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம். கட்டணம் எதுவும் கிடையாது.

பதிவு செய்ய அக்.23 கடைசிநாள்

பங்கேற்க விரும்புபவர்கள் https://connect.hindutamil.in/special/nlc-quiz என்ற லிங்க்கில் பதிவு செய்ய வேண்டும். இப்போட்டியில் பங்கேற்பதற்கான விதிமுறை, தலைப்புகள் / பாடங்கள்லிங்க்கில் வழங்கப்படும். பதிவு செய்ய கடைசி நாள் அக்.23.

இந்த நிகழ்வின் நாலெட்ஜ் பார்ட்னராக எக்ஸ் குவிஸ் ஐடி இணைந்துள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இ-சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 9003196509 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x