Published : 13 Sep 2020 07:06 AM
Last Updated : 13 Sep 2020 07:06 AM

‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் இன்று செயற்கை நுண்ணறிவு, சைபர் செக்யூரிட்டி படிப்பு குறித்து உரை: ‘இந்து தமிழ் திசை’, சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி வழங்குகின்றன

சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டிநிகழ்ச்சியில் இன்று மாலை 4 மணிக்கு செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்,சைபர் செக்யூரிட்டி, குவான்டம் கம்ப்யூட்டிங் படிப்புகள் குறித்து நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

துறை வல்லுநர்கள் விளக்கம்

பிளஸ் 2-வுக்குப் பிறகு எங்கு,என்ன படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகள், குழப்பங்களோடு நிற்கும் மாணவர்கள், பெற்றோருக்கு வழிகாட்டும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்வு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

இதில் சென்னை ஐஐடி இயந்திரவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் என்.ரமேஷ் பாபு, ஏஐசிடிஇ - கொள்கை மற்றும் கல்வித் திட்டமிடல் பணியகத்தின் ஆலோசகர் பேராசிரியர் ஆர்.ஹரிஹரன், அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ‘மெட்சிக்ஸ்’ நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான நிகின் தரன், சென்னை கூகுள்டெவலப்பர் குரூப், க்யூப் சினிமாஸ்இன்ஜினீயரிங் பிரிவு தலைவர் சோமசுந்தரம் மகேஷ் ஆகியோர் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவு, சைபர் செக்யூரிட்டி படிப்புகள், அதற்கான வேலைவாய்ப்புகள் குறித்து உரையாற்றுகின்றனர்.

இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது. அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள், பெற்றோர் https://connect.hindutamil.in/event/35-uuk.html என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x