Published : 11 Sep 2020 04:56 PM
Last Updated : 11 Sep 2020 04:56 PM
அண்ணா பல்கலைக்கழகத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேர்வதற்காக விண்ணப்பிக்க, செப்.30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கல்லுாரிகளில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு எனத் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை, இணைய வழியாக மேற்கொள்ளப்படுகிறது.
பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஆக.21-ம் தேதி தொடங்கியது. இதற்கான காலக்கெடு செப்.8-ம் தேதியுடன் முடிவதாக இருந்தது. எனினும், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் போதாது எனவும், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், செப்.30-ம் தேதி வரை மாலை 5.30 மணி வரை அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தகவலை அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கருணாமூர்த்தி, https://admissions.annauniv.edu/nri2020/documents/NRIextension.pdf என்ற பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கூடுதல் விவரங்களுக்கு: https://admissions.annauniv.edu/nri2020/
முன்னதாக பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்சிஏ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT