Published : 06 Sep 2020 08:10 AM
Last Updated : 06 Sep 2020 08:10 AM

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதுக்குஇந்த ஆண்டு 375 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

செங்கை மாவட்டத்தில்சிங்கபெருமாள் கோயில் அரசுப் பள்ளி ஆசிரியர் லலிதா, செங்கல்பட்டு புனிதஜோசப் பள்ளி ஆசிரியர் பாபு கிறிஸ்டோபர், மதுராந்தகம் இந்து பள்ளி ஆசிரியர் வெங்கட பெருமாள், மதுராந்தகம் - குருவாபதம்மேடு ஊராட்சிபள்ளி ஆசிரியர் வரதன், தாம்பரம் எம்.சி.சி.ஆர்.எஸ்எல்.தொடக்கப் பள்ளி ஆசிரியர்லீதியாள் சாந்தகுமாரி, மண்ணிவாக்கம் நடேசன் வித்யாசாலா பள்ளி ஆசிரியை புஷ்கலா நல்லாசிரியர் விருது பெறுகின்றனர்.

இவர்களுக்கு நாளை (7-ம்தேதி) ஆட்சியர் விருதுவழங்கி கவுரவிக்க உள்ளார்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில், நாயகன்பேட்டை அரசுப் பள்ளிஆசிரியர் ரமேஷ், பெருநகர் அரசுப் பள்ளி ஆசிரியர் மாலதி, கொளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் லாரன்ஸ், குன்னம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் நண்பன், கீழம்பி அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர் ரமேஷ்குமார், கூத்திரம்பாக்கம் ஊராட்சிநடுநிலைப் பள்ளி ஆசிரியர் சங்கரி, மேற்கு ராஜவீதி சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஜாக்குலின் மேரி ஆகியோர் நல்லாசிரியர் விருது பெறுகிறார்கள்.

இவர்களுக்கு காஞ்சி ஆட்சியர் விருது வழங்கி கவுரவிக்க உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x