Published : 04 Sep 2020 07:18 AM
Last Updated : 04 Sep 2020 07:18 AM
கல்லூரிகளில் சேர்ந்த பின்பு சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தரவேண்டும் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார், அனைத்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
நடப்பு ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்த பின் மாணவர்கள் சேர்க்கையை திரும்ப பெற்றால் உரியவிதிமுறையைப் பின்பற்றி கட்டணங்களை திருப்பி அளிக்க வேண்டும். அதன்படி நவ. 10-க்குள் சேர்க்கையை திரும்ப பெறும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட முழு கட்டணத்தை கல்லூரிகள் வழங்க வேண்டும். அதிகபட்சம் சேர்க்கை பணிகளுக்காக அவர்களிடம் ரூ.1,000 மட்டுமே வசூலிக்கலாம்.
அதேபோல், நவ.10-க்குப் பின் சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களிடம் குறிப்பிட்ட காலம் வரையான கட்டணத்தை மட்டும் பிடித்தம் செய்து மீதமுள்ள தொகையை தரவேண்டும். மேலும், ரத்து செய்த மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் தரவேண்டிய கட்டணங்கள், ஆவணங்களை திருப்பி அளிக்க வேண்டும். இல்லையெனில் விதிமுறைகளின்படி கல்லூரிகள் மீது நட வடிக்கை எடுக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT