Published : 23 Jun 2020 07:15 AM
Last Updated : 23 Jun 2020 07:15 AM

நீட் தேர்வை தள்ளிவைப்பது குறித்து விரைவில் ஆலோசனை

நீட் தேர்வை தள்ளிவைப்பது பற்றி விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கை யாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்த நேரத்தில் நீட் தேர்வை நடத்துவது மிகவும் ஆபத்தானது. அதனால், கரோனா பாதிப்பு குறையும் வரை நீட் தேர்வைநடத்தக் கூடாது என்று பெற்றோர் கோரியுள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “நீட் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளது. கரோனா பாதிப்பு குறையவில்லை என்றால் நீட் தேர்வை தள்ளி வைக்குமாறு மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x