Last Updated : 05 Jun, 2020 05:39 PM

 

Published : 05 Jun 2020 05:39 PM
Last Updated : 05 Jun 2020 05:39 PM

தேர்வெழுதத் துணை தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதத் தேவையில்லை: சிபிஎஸ்இ அறிவிப்பு

தேர்வெழுதத் துணை தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதத் தேவையில்லை என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த சிபிஎஸ்இ அதிகாரி, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இன்னொருவரின் துணையுடன் தேர்வெழுத வேண்டும் என்ற நிலையில் இருந்தால், அவர்கள் தேர்வெழுதத் தேவையில்லை.

தனி மனித விலகல் விதிமுறைகளிபடி இந்த முடிவு எடுக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களின் பள்ளிகளில் இதுகுறித்துத் தெரிவிக்கலாம். சிபிஎஸ்இ வாரியம் எடுக்கின்ற மதிப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் அவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளன அதேபோல 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு வன்முறை காரணமாகத் தள்ளி வைக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் மட்டும் நடைபெற உள்ளது. இத்தேர்வும் ஜூலை மாதம் நடைபெறுகிறது.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மாற்று மதிப்பீட்டு முறையை சிபிஎஸ்இ விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x