Published : 05 Jun 2020 05:15 PM
Last Updated : 05 Jun 2020 05:15 PM

12-ம் வகுப்பு இறுதித் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் விவரம்: தேர்வுத் துறை உத்தரவு

கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பு இறுதிப் பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் விவரம் மாவட்ட வாரியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்துத் தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷா ராணி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பு இறுதித் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் விவரம், மாவட்டவாரியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

பட்டியலைச் சரிபார்த்து ஏற்கெனவே தேர்வில் பங்கேற்ற மாணவர்களை எக்காரணம் கொண்டும் மீண்டும் தேர்வெழுத அனுமதிக்கக் கூடாது. இது தவிர தேர்வுப் பணிகளில் அதே பள்ளியின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களை நியமனம் செய்யக்கூடாது.

அதேபோல், அவசரத் தேவை ஏற்பட்டால் பயன்படுத்த ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் கூடுதலாகத் தேர்வு மையங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், மாற்றுப் பணிக்குத் தேவையான கூடுதல் ஆசிரியர்கள், பணியாளர்களையும் முன்கூட்டியே தேர்வு செய்துவிட வேண்டும்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x