Published : 21 May 2020 12:12 PM
Last Updated : 21 May 2020 12:12 PM

வேம்பார் அரசுப் பள்ளியில் மாணவர்களின் குடும்பத்துக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஆசிரியர்கள்

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

வேம்பார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 600 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மார்ச் 24-ம் தேதி இரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேம்பார் அரசுப் பள்ளியில் படிக்கும் தந்தையை இழந்த மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவ மாணவியர்கள் குறித்த பட்டியலை தலைமையாசிரியர் உதவியுடன் ஆசிரியர்கள் தயாரித்தனர்.

இதன்படி 44 மாணவ மாணவியர்களின் குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட தலா ரூ.700 மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை வழங்க முடிவு செய்தனர்.

இதையடுத்து 44 மாணவ மாணவியர்களின் குடும்பத்தினரை பள்ளிக்கு வரவழைத்து சமூக இடைவெளியுடன் அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.

கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்து மாணவர்களின் குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கடற்கரை வேல், தமிழாசிரியர் மாணிக்கராஜ், உதவித் தலைமையாசிரியர் மந்திரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தங்களது தேவையறிந்து சமயத்துக்கு உதவிக்கரம் நீட்டிய ஆசிரியர்களுக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x