Published : 20 May 2020 01:05 PM
Last Updated : 20 May 2020 01:05 PM
சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்தவர்கள், மத்திய அரசு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு, மத்திய அரசு ஆண்டுதோறும் துரோணாச்சாரியா, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா, ராஷ்ட்ரிய கேல் புரோட்சஹான், தயான் சந்த் ஆகிய உயரிய விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
இதன்படி 2020-ம் ஆண்டில் வழங்கப்பட உள்ள மேற்கண்ட விருதுகளுக்குத் தகுதியுடைய வீரர், வீராங்கனைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பம் மற்றும் விருது வாரியான தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள், www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. வீரர், வீராங்கனைகள் விதிமுறைகளை முழுவதுமாகப் படித்துத் தகுதியுள்ள விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆர்.பி.ரவிச்சந்திரன் கூறும்போது, ''மேற்கண்ட விருதுகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்துறை விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வரும் 26-ம் தேதிக்குள் அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து 'உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-ஏ, ஈவேரா பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை-84' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். நிபுணர் குழு விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து தகுதியான நபர்களை விருதுக்குப் பரிந்துரை செய்யும். அவர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT