Published : 23 Mar 2020 06:30 PM
Last Updated : 23 Mar 2020 06:30 PM

கல்விச் சமூகம் ஒன்றிணைந்து கரோனாவைத் தடுப்போம்: யுஜிசி தலைவர் அழைப்பு

கல்விச் சமூகம் ஒன்றிணைந்து கரோனாவைத் தடுப்போம் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது. அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்தது.

இந்நிலையில் கல்வி சமூகத்துக்கு யுஜிசி தலைவர் டி.பி.சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில், ''இந்த இக்கட்டான சூழலில், அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள், 14 லட்சம் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்கள், 3.74 லட்சம் மாணவர்கள் அனைவரும் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும்.

தங்களைக் காத்துக் கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நம்முடைய குடும்ப நண்பர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மற்றவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நம்மை நலமுடன் வைத்துக் கொள்வதன் மூலம், அடுத்தவர்களும் நலமாய் இருக்க உதவலாம். கல்வி சமூகம் ஒன்றிணைந்து கைகோத்து, கரோனா வைரஸ் பரவலைத் தடுப்போம் வாருங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக யுஜிசி, சிபிஎஸ்சி கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்கள் மார்ச் 31-ம் தேதி வரை வீட்டில் இருந்து பணி புரியலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x