Published : 19 Feb 2020 08:21 AM
Last Updated : 19 Feb 2020 08:21 AM
கரோனா வைரஸ் தாக்குதல் பற்றிய அச்சத்தின் காரணமாக டோக்கியோ மாரத்தான் பந்தயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானின் டோக்கியோ நகரில் ஆண்டுதோறும் மாரத்தான் பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான மாரத்தான் பந்தயம் மார்ச் 1-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதில் 38 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்ந்லையில் கரோனா வைரஸ் பரவுமோ என்ற அச்சம் காரணமாக டோக்கியோ மாரத்தானின் அமெச்சூர் பிரிவு பந்தயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டோக்கியோ மாரத்தான் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கரோனா வைரஸ் காரணமாக டோக்கியோவில் ஒருசிலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு மாரத்தான் போட்டியை நடத்துவது கடினம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளனர். அதேநேரத்தில் தொழில்முறை வீரர்களுக்கான பிரிவில் மாரத்தான் போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT