Published : 14 Feb 2020 08:34 AM
Last Updated : 14 Feb 2020 08:34 AM
தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் மான்கொம்பு போட்டியில் வில்லிபுத்தூரைச் சேர்ந்த மாணவிகள் இருவர் பதக்கம் வென்றனர்.
16-வது தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான சிலம்பம் போட்டி மற்றும் மான்கொம்பு வீசும் போட்டி கோவையில் தனியார் பல்கலைக்கழக மைதானத்தில் கடந்த 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 400-க்கும்மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மான்கொம்பு வீசும் போட்டியில் வில்லிபுத்தூர் காளீஸ்வரி மெட்ரிகுலேஷன் பள்ளியின் 4-ம் வகுப்பு மாணவி பார்கவி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார், அப்பள்ளியின் 3-ஆம் வகுப்பு மாணவி காவியதர்ஷினி மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
தேசிய மான்கொம்பு போட்டியில் பதக்கங்கள் பெற்ற இரு மாணவிகளுக்கும் பள்ளி நிர்வாகத்தினரும் ஆசிரியர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT