Published : 28 Jan 2020 09:16 AM
Last Updated : 28 Jan 2020 09:16 AM
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காத்யா சதி திவாஸ் என்ற புதிய திட்டத்தை கடந்த 2016-ம்ஆண்டு ஜனவரி 27-ம் தேதி அறிமுகப்படுத்தினார்.
இதன்மூலம், அரசு நியாயவிலைக் கடைகளில் அரிசி, கோதுமை ஆகிய உணவு பொருட்கள் ஒரு கிலோ ரூ.2-க்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முதல்வர் மம்தா தனது ட்விட்டர் பதிவில், “இதேநாளில் தொடங்கப்பட்ட திவாஸ் திட்டம் மூலம் ஏழை மக்களின் உணவை உறுதி செய்துள்ளோம். மேற்கு வங்கத்தின் 90% மக்களின் அரிசி பாதுகாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அசாமில் மாநில அரசுப் பணிக்கும் 10-ம் வகுப்பு வரை அசாமி கட்டாயம்
குவஹாத்தி
அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளி லும் அசாமி மொழிப்பாடம் கட்டயமாக படிக்கவேண்டும்.
இதில் 10-ம் வகுப்பு வரை அசாமி மொழி படித்த மாணவர்கள் மட்டுமே மாநில அரசுப் பணிகளுக்கு தகுதி உடையவர்களாக கருதப்படுவார்கள் என்று அசாம் கல்வித் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், “தொடக்க நிலைப் பள்ளிகளில் தோராயமாக 15,000 ஆசிரியர் பணியிடங்களும், இரண்டாம் நிலையில் 8000 ஆசிரியர் பணியிடங்களும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிரப்பப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT