Published : 28 Jan 2020 07:48 AM
Last Updated : 28 Jan 2020 07:48 AM

அமிர்தா - இந்து தமிழ் திசை இணைந்து வழங்கும் அறிவுத் திருவிழா விநாடி வினா: சென்னையில் நாளை நடக்கிறது

அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் உடன் இணைந்து 'இந்து தமிழ் திசை' வழங்கும் அறிவுத் திருவிழா நிகழ்ச்சி சென்னையில் நாளை (ஜன. 29) நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான விநாடி – வினா போட்டி நடைபெறுகிறது. இதில் 9 முதல் 12-ம் வகுப்புவரை பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ – மாணவியர் பங்கேற்கலாம். ஒரு குழுவில் அதிகபட்சம் 2 மாணவர்கள் இருக்கலாம்.

அடையாள அட்டை வேண்டும்

இந்த விநாடி- வினா போட்டி நாளை (புதன்கிழமை) சென்னை முகப்பேரில் உள்ள எஸ்பிஐஓஏ மாடல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்குத் தொடங்குகிறது.

இப்போட்டியில் ஒரு பள்ளியிலிருந்து எத்தனை குழுக்கள் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். போட்டி நடைபெறும் இடத்திலேயே பதிவுசெய்து கொள்ளலாம். போட்டி யில் பங்கேற்கும் மாணவர்கள் பள்ளி அடையாள அட்டையுடன் பள்ளிச் சீருடை அணிந்து போட்டியில் பங்

கேற்க வர வேண்டும்.

மேலும் விவரங்களை அறிய 9791605238 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x